இராமநாதபுரம்முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் வாரச்சந்தை நடத்துவதற்கான உரிமம் வழங்கப்பட்டது

முதுகுளத்தூர் வாரச்சந்தை நடத்துவதற்கான உரிமம் வழங்கப்பட்டது

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பேரூராட்சி சொந்தமான வாரச்சந்தை ஏலம் நடைபெற்றது.
இதில் 12 நபர்கள் ஏலத்தில் கலந்து கொண்டனர். கடந்த ஆண்டு 16 லட்சத்திற்கு வாரச்சந்தை ஏலம் போனது. தற்போது நடப்பாண்டு 33 லட்சம் ரூபாய்க்கு வாரச்சந்தை ஏலத்தொகை விடப்பட்டுள்ளது.இந்த ஏலத்தில் காடமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் ரூ.33 லட்சத்திற்கு ஏலம் எடுத்தார்.அதற்கான உரிமம் ஆணையை பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ் வாரச்சந்தை ஏலம் எடுத்த முருகேசனிடம் வழங்கினார். பேரூராட்சி தலைவர் ஷாஜகான் உடன் இருந்தார்.




