தமிழ்நாடு
தலைசிறந்த தலைமைத்துவம்

மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் கடந்த 19.05.2026 செவ்வாய்க்கிழமை “KCL Expresso” என்ற நிகழ்ச்சியில் “ Outstanding Leadership – தலைசிறந்த தலைமைத்துவம் ” என்ற தலைப்பில், மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி தமிழ் உதவிப்பேராசிரியர் முனைவர்.சே.முனியசாமி அவர்கள் சிறப்புரையாற்றினார். தலைசிறந்த தலைமைத்துவைத்தைப் பெற ஆறு வகையான பண்புகளை எடுத்துரைத்து, அப்பண்புகளை யார் தங்களது வாழ்வில் நடைமுறைப்படுத்துகின்றாரோ அவர்கள் சிறந்து விளங்குவர் என்பதைக் குறித்து உரை நிகழ்த்தினார். மேலும் தலைமைத்துவம் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை பகிர்ந்தார்.இந்நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள், வாசகர்கள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.








