உலகம்
துபாயில் கிரீன் குளோப் அமைப்பு சார்பில் ‘எர்த் அவர்’ அனுசரிப்பு

துபாயில் கிரீன் குளோப் அமைப்பு சார்பில் ‘எர்த் அவர்’ அனுசரிப்பு

துபாய் :
துபாய் கிரீன் குளோப் அமைப்பு சார்பாக கடந்த வருடங்களை போலவே இவ்வருடமும், நிலவி வரும் கால சீதோஷன, பருவ மாற்றம் மற்றும் ஆற்றல் சேமிப்பு உள்ளிட்ட கருத்துருவாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக “எர்த் அவர்” 28.03.2026 அன்று அமீரக நேரப்படி இரவு 8.30 மணியளவில் அனுசரிக்கபட்டது.
இதில் கிரீன் குளோப் அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் சுமார் 1 மணி நேரம் இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை தங்கள் இருப்பிடங்களில் விளக்குகளை அணைத்து பங்களிப்பை வழங்கினர்.
நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.









