கவிதைகள் (All)

குடியரசு தின வாழ்த்துக்கள்

குடியரசு தின வாழ்த்துக்கள் 

முடியாட்சி முடிந்து 

குடியாட்சி மலர்ந்தது .

மன்னராட்சி மறைந்து 

மக்களாட்சி மலர்ந்தது. 

எழுபத்திஏழாம் ஆண்டு எழுச்சியுடன் மலரட்டும். 

இதற்காக உழைத்தவர்கள் இதயங்கள் மகிழட்டும். 

குடியாட்சி என்பது குடிமக்களுக்காக , 

குடி மக்கள் தேர்ந்தெடுத்த

 குடிமகன்கள் ஆள்வது  

குடிமக்களை அழிக்கும் குடியால் வரும் பணத்தில் 

குடியாட்சி நடக்கும் நிலை

 முடிவுக்கு வரவேண்டும்

இனம், மொழி, மதமென்ற இன்னபிற வேற்றுமைகள் 

இனியேனும் மறையட்டும்

 இந்த தேசம் உயரட்டும்.

தேசபக்தி , தெய்வபக்தி , 

தொழில் பக்தி கொண்டோரால் 

தேசத்தின் வளர்ச்சியில் தேக்கநிலை மாறட்டும். 

தொழிலும் , விவசாயமும் தொய்வின்றி முன்னேறி 

பொருளாதார நிலை பொலிவோடு வளரட்டும். 

பார்ப்போரைக்கவரும் நம் பண்பாடும் , கலாச்சாரமும் 

பார் போற்ற விளங்கட்டும்

பாரதம் சிறக்கட்டும

எல்லைக்காகும் பணியில் இன்னரும் தியாகம்செய்த

வீரர்களின் புகழ் 

விண்ணளவு ஓங்கட்டும் .  

இத்தனையும் நடந்து

இத்தரணி போற்றுகின்ற 

 முத்தனைய நாடாக முன்னேற்றம் காணட்டும்.

எத்தனையோ மாந்தர்கள் 

ரத்தம் சிந்தி பெற்ற , 

சுதந்திரமும், குடியரசும் காக்க 

சூளுரைப்போம் இந்நாளில்.

வந்தே மாதரம். வாழ்க பாரதம்.

குடியரசு தின வாழ்த்துக்களுடன் 

சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்   

26.01.2026

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button