இராமநாதபுரம்
கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும், அனைத்து ஊராட்சிகளிலும் வேலையை உடனடியாக தொடங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா தலைவர் அருள்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் கலையரசன், மாவட்டத் தலைவர் முத்துராமன், தாலுகா செயலாளர் சேதுராமு, சிபிஐ தாலுகா செயலாளர் ஜெயகாந்தன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.





