இராமநாதபுரம்
2025-ம் ஆண்டில் 50 நபர்கள் GOONDAS – சட்டத்தில் கைது

2025-ம் ஆண்டில் 50 நபர்கள் GOONDAS – சட்டத்தில் கைது

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காவல்நிலைய பகுதியில் நான்கு நபர்களை கொலை செய்ய முயன்ற சரத்குமார் என்பவர் மீது தேவிபட்டினம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இந்நபர் தொடர்ந்து சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஸ்.IPS., அவர்களி பரிந்துரையின் பேரில், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.சிம்ரன்ஜீத் சிங் காலோன்.IAS., அவர்கள் சரத்குமாரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் அடைக்க உத்தரவிட்டார்கள்.
மேலும், இராமநாதபுரம் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டில் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட 50 நபர்கள் குண்டர் தடுப்புக் காவலி சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




