இராமநாதபுரம்

கமுதி ராமசாமிபட்டி நகர பேருந்து இயக்கம்

கமுதி ராமசாமிபட்டி நகர பேருந்து இயக்கம்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு வனத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பனிடம் ராமசாமிபட்டி பொதுமக்கள் பஸ் வசதி வேண்டி கோரிக்கை வைத்தனர்.

அமைச்சர் கோரிக்கையை ஏற்று இன்று கமுதி பஸ்நிலையத்தில் இருந்து ராமசாமிபட்டி கிராமத்திற்கு புதிய வழித்தடத்தில் நகர பேருந்து இயக்கப்பட்டது. முன்னதாக பேருந்தை கமுதி மத்திய ஒன்றியசெயலாளர் சண்முகநாதன் கொடியசைத்து துவக்கிவைத்தார். இதில் கழக நிர்வாகிகள் பள்ளி மாணவ செல்வங்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். பேருந்து வசதி செய்ததற்கு அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ராமசாமிபட்டி கிராமபொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button