இராமநாதபுரம்

கீழக்கரையில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கீழக்கரையில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முஸ்லிம் பஜாரில் மத்திய அரசின் வக்ப்பு திருத்த சட்டத்தை கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் தாலுகா ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி மற்றும் வக்பு சொத்துக்கள் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கமிட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் தூத்துக்குடி சம்சுதீன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் கீழக்கரை வட்டார ஜமாத்துல் உலமா சபை தலைவர் அப்பாஸ் அலி மண்ப தமிழக மக்கள் ஒற்றுமை மேடை ராஜ்குமார் கீழக்கரை நாலாவது வார்டு நகர் மன்ற உறுப்பினர் சூரியகலா தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட குழு உறுப்பினர் முகமது ஃபரூஸ் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட குழு உறுப்பினர் சீனி முகமது தம்பி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்ட குழு உறுப்பினர் ஷாம் விக்டர் நன்றி உரையாற்றினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button