இராமநாதபுரம்
முளைப்பாரி திருவிழா

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஆதிமுத்துமாரியம்மன் ஆலய இரண்டாம் ஆண்டு முளைப்பாரி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் அதிமுக நகர்செயலாளர் வின்சென்ட்ராஜா தலைமையில் ஆயிரம் நபர்களுக்கு இளநீர் பாயாசம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்றஉறுப்பினர் சதன்பிரபாகரன் அவர்கள், கிழக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, நகர்மன்ற உறுப்பினர் மோகன், ஐடிவிங் ஒன்றிய செயலாளர் சசிகுமார், இளைஞர் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் PSD.தினேஷ், தொழிற்சங்க ஒன்றிய தலைவர் திருமுருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.




