கீழக்கரை பகுதிகளில் மருந்து தெளிக்கும் பணி துவக்கம்

கீழக்கரை பகுதிகளில் மருந்து தெளிக்கு பணி துவக்கம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி மாவட்ட சுகாதார அலுவலர் அறிவுறுத்தலின் படி மலேரியா, டெங்கு, சிக்கன் குனியா காய்ச்சல் வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதிர் கொசுக்களை ஒழிக்க வீட்டின் உட்புறங்களில் மருந்து தெளிக்கும் பணி (மலேரியா (IRS) நடைபெறுகிறது
இந்த மருந்து தெளிக்கும் பணி ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் இரண்டு தவணையாக அடிக்கப்படுகிறது.
கீழக்கரை நாகராட்சியில் நகர் மன்ற தலைவர் மற்றும் ஆணையாளர் அறிவுறுத்தலில்,நோய் தடுப்பு மற்றும் போது சுகாதார துறையுடன் இணைந்து,
தற்போது கீழக்கரை நகராட்சியில் IRS மருந்து தெளிக்கும் பணி நடை பெற்றுகொண்டிருக்கிறது,
இதில் மலேரியா அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள், மற்றும் துப்புரவு ஆய்வாளர், அனைவரும் கலந்து கொண்டனர்,இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து, பயன்படுத்தி கொள்ளுமாறு நகராட்சி சார்பில் கேட்டுக் கொண்டுள்ளனர்




