குடிநீர் குழாய் பழுது: சீரமைக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை

Vinkmag ad

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஒன்றிய கவுன்சில் கூட்டம், தலைவர் சுதந்திராகாந்தி தலைமையிலும், பி.டி.ஓ.,க்கள் ரவிச்சந்திரன், செந்தூர்பாண்டியன் முன்னிலையிலும் நடந்தது.
கூட்ட விவாதம்:
சிவக்குமார் (அ.தி.மு.க.,): வெள்ள நிவாரண நிதியை, பாரபட்சமின்றி, பாதிக்கபட்ட பகுதிகளில் பயன்படுத்த வேண்டும்.

வேலுச்சாமி (அ.தி.மு.க.,): தேரிருவேலி அருகே, அனிகுருந்தன் கிராமத்தில் சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்.

சூசையம்மாள் (அ.தி.மு.க.,): வளநாடு செங்கற்படை இடையே சிறு பாலம் சேதமடைந்துள்ளது. இதை சீரமைக்க வேண்டும்.

ஹேமா (அ.தி.மு.க.,): அலங்கானூர் ஆதிதிராவிடர் காலனிக்கு, குடிநீர் சப்ளை செய்யவேண்டும்.

கோபால் (அ.தி.மு.க.,): குழாய் பழுதை நீக்கி காவிரி குடிநீர் சப்ளை செய்யாத, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ஒப்பந்தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

 

News

Read Previous

பேராசிரியர் முனைவர் பீ.மு. மன்சூருக்கு ஷார்ஜாவில் நகரத்தார் சங்கத்தில் அளித்த வாழ்த்துப்பா

Read Next

அய்யனார் கோயில் திருவிழா

Leave a Reply

Your email address will not be published.