குடிநீர் குழாய் பழுது: சீரமைக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை
முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் ஒன்றிய கவுன்சில் கூட்டம், தலைவர் சுதந்திராகாந்தி தலைமையிலும், பி.டி.ஓ.,க்கள் ரவிச்சந்திரன், செந்தூர்பாண்டியன் முன்னிலையிலும் நடந்தது.
கூட்ட விவாதம்:
சிவக்குமார் (அ.தி.மு.க.,): வெள்ள நிவாரண நிதியை, பாரபட்சமின்றி, பாதிக்கபட்ட பகுதிகளில் பயன்படுத்த வேண்டும்.
வேலுச்சாமி (அ.தி.மு.க.,): தேரிருவேலி அருகே, அனிகுருந்தன் கிராமத்தில் சேதமடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்.
சூசையம்மாள் (அ.தி.மு.க.,): வளநாடு செங்கற்படை இடையே சிறு பாலம் சேதமடைந்துள்ளது. இதை சீரமைக்க வேண்டும்.
ஹேமா (அ.தி.மு.க.,): அலங்கானூர் ஆதிதிராவிடர் காலனிக்கு, குடிநீர் சப்ளை செய்யவேண்டும்.
கோபால் (அ.தி.மு.க.,): குழாய் பழுதை நீக்கி காவிரி குடிநீர் சப்ளை செய்யாத, குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள், ஒப்பந்தாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.