அய்யனார் கோயில் திருவிழா
முதுகுளத்தூர் முளைக்கொட்டுத் திண்ணை தெருவில் செவ்வாய்க்கிழமை அய்யனார் கோயில் உற்சவத்தை முன்னிட்டு பொங்கல் விழா நடைபெற்றது.
முளைக்கொட்டுதிண்ணை தெருவில் இருந்து கடைத்தெரு வழியாக ஊர்வலமாக வந்து கிராம மக்கள் அய்யனார் கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.
விழாவை முன்னிட்டு வள்ளிதிருமணம் நாடகம், கபடிப் போட்டி, பள்ளி மாணவ,மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.