05- 05- 2013 “ உலக “ சிரிப்பு தினமாகும்.” மனமகிழ்ச்சியை தொலைத்து விட்டு வெறுமையில் வாடும் உள்ளங்கள் உலகில் ஏராளம், ஏராளம். சிரிப்பு தினத்தில் சிரிப்பை பற்றி சில சிறப்பான செய்திகளை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சிரிப்பு ஒரு மாமருந்து சிரியுங்கள், உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும் அழுங்கள் நீங்கள் ஒருவர்தான் தனித்து அழுதுகொண்டிருப்பீர்கள்.. இன்று வாழ்வில் நாம் திரும்பிப் பார்க்கும் திசையில் எல்லாம் தெரிபவை இரண்டு. அவைகளில் ஒன்று அதிருப்தி. மற்றொன்று பேராசை. இந்த இரண்டும் தனித்தனியாக்கூட இல்லை.உள்ளங்கையும் புறங்கையும் போல ஒன்றின் இருபக்கங்களாக இருக்கின்றன. யாரிடம் பேராசை இருக்கிறதோ அவரின் மறுபுறம் அதிருப்தியும் இருக்கிறது. கிடைத்தற்குத் திருப்திப்பட்டுக்கிடைக்க வேண்டியதற்காக உழைக்கும் ஆரோக்கியமான மனநிலை தென்படவில்லை. பணம் படத்தில் N.S. கிருஷ்ணன் பாடிய சிரிப்பு பாடலைப் பலரும் கேட்டு இருக்கலாம்.…