சிரிப்பு ஒரு மாமருந்து

Vinkmag ad
05- 05- 2013 “ உலக “ சிரிப்பு தினமாகும்.” மனமகிழ்ச்சியை தொலைத்து விட்டு வெறுமையில்

வாடும் உள்ளங்கள் உலகில் ஏராளம், ஏராளம்.
சிரிப்பு தினத்தில் சிரிப்பை பற்றி சில சிறப்பான செய்திகளை உங்களோடு பகிர்ந்து

கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


சிரிப்பு ஒரு மாமருந்து
                                                   

சிரியுங்கள், உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும்                                                   அழுங்கள் நீங்கள் ஒருவர்தான் தனித்து அழுதுகொண்டிருப்பீர்கள்..
இன்று வாழ்வில் நாம் திரும்பிப் பார்க்கும் திசையில் எல்லாம் தெரிபவை இரண்டு. அவைகளில் ஒன்று அதிருப்தி. மற்றொன்று பேராசை. இந்த இரண்டும் தனித்தனியாக்கூட இல்லை.உள்ளங்கையும் புறங்கையும் போல ஒன்றின் இருபக்கங்களாக இருக்கின்றன.  யாரிடம் பேராசை இருக்கிறதோ அவரின் மறுபுறம் அதிருப்தியும் இருக்கிறது. கிடைத்தற்குத் திருப்திப்பட்டுக்கிடைக்க வேண்டியதற்காக உழைக்கும் ஆரோக்கியமான மனநிலை தென்படவில்லை.

பணம் படத்தில் N.S. கிருஷ்ணன் பாடிய சிரிப்பு பாடலைப் பலரும் கேட்டு  இருக்கலாம்.
சிரிப்பில் பல வகையுண்டு.

அவற்றில் சில:–
வாய்விட்டு சிரிப்பது –    நமட்டு சிப்பு –    வாயை மூடிக்கொண்டு சிரிப்பது –   ஓகோ என்று சிரிப்புது-   அவுட்டு சிரிப்பு – வெடிச்சிரிப்பு –   ‘களுக்’கென்று சிரிப்பு –    பயங்கரமாய் சிரிப்புது –    புன்சிரிப்பு–  வயிறு வலிக்கச் சிரிப்பு – விழுந்து,விழுந்து சிரிப்பது –  குபீரென்று சிரிப்பு –   மனதுக்குள்ளே சிரிப்பு –   உதட்டளவில் சிரிப்பு ,   வெறிச்சிரிப்பு –  கலகல வென்று சிரிப்பு – ‘பக்’கென்று சிரிப்பு-   குலுங்கச் குலுங்க சிரிப்பு-    சங்கீத சிரிப்பு,   வஞ்சகச் சிரிப்பு,   கடைசியாக வருவதுதான் *கபட சிரிப்பு.

எதையும் கேலி  செய்வதற்கு விஷயத் தெளிவு வேண்டும். அதை நகைச்சுவையோடு கேலி செய்வதற்கு புத்திசாலிதனம் வேண்டும். அதுவும் பிறர் மனம் புண்படாமல் கேலி செய்ய, கேலிசெய்வதற்குப் பக்குவமான  அறிவு வேண்டும். அத்துடன் சிந்தனையை தூண்டிவிட தெளிந்த மனம் வேண்டும்.

சிரிப்பு ஆக்கபூர்வமானது.  சிரியுங்கள்.  மனம் சுத்தமாகிறது.  ஆரோக்கியமடைகிறது. மனம் ஆரோக்கியமடைந்தால் அதைத் தொடர்ந்து உடம்பும் ஆரோக்கியம் அடைகிறது .அப்படி ஒரு மருந்து இருப்பதை  நாம் மறந்து விடுகிறோம். அவ்வளவுதான். சிரிப்பெனும் மருந்தைத் தினம் தினம் அருந்துங்கள்  . கடந்த 30 ஆண்டுகளாக நமது உள்ளத்திற்கும் , நோய்களுக்கும் இடையே  இயல்பானதொடர்பை ஆராய்ந்து வருகிறார்கள் உடற்கூறு வல்லுநர்கள். இந்த  ஆராய்ச்சியின் பலனாக ஒரு  உண்மையைக் கண்டறிந்தனர்.

சிரிப்பு ஒரு மாமருந்து.   நமது எண்ணங்களுக்கும் மன நிலைக்கும் ஏற்றபடி உடலினுள் இயங்கும் செல்களின் நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது, அல்லது குறைகிறது என்பதே அது. 1993-ம்ஆண்டின் இவ்வாராய்ச்சியில் ஒரு பயனுள்ள உண்மை கண்டறியப்பட்டது. நமது நரம்புகள் ஒரு இரசாயனத்தை வெளியிட்டுக் கொண்டுடிருக்கிறது.  இதற்கு “CGRP” என்று  பெயர்.  இதுதான்நரம்புகளுக்கு அடியிலுள்ள  நோய் எதிர்ப்பு சக்தி செல்களின்  இயல்பை ஊக்குவிப்பதும், மட்டுப்படுத்துவதும். நமது மன அலைக்கு ஏற்ப ‘CGRP’ அதிகமாக உற்பத்தியாக்கி உடலில், நோய் எதிர்ப்புசக்தியும் அதிகமாக்கும். நாம் மனம் விட்டுச் சிரிக்கும் போது ‘CGRP’ அதிகமாகச் சுரக்கிறது என்பதுதான்  ஆராய்ச்சியில் கண்டறிப்பட்ட உண்மை.

உலகின் மிகச் சிறந்த மருந்து மனம்விட்டுச் சிப்பதே என்று நியூயார்க் பல்கலைக் கழகப் பேராசியர்
ஆர்தர்ஸ்டோன் தன் ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளார்.  நாம் சிரிக்கும் போது நம் மூக்குனுள் உள்ள சளியில் ‘ம்யூனோகுளோபுலின் ஏ’  [IMMUNOGLOBULIN-A]  என்ற நோய் எதிர்ப்புப் பொருள்அதிகரித்து பாக்டீயாக்கல், வைரஸ், புற்று நோய்த் திசுக்கள் உடலுக்குள் சென்று விடாமல் தடுக்கிறதுதாம்.  இதனால் மனம்விட்டுச் சிரிப்பவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் நீண்ட நாட்கள்ஆரோக்கியமாக உயிர் வாழலாம் என்கிறார்   ஆந்தப் பேராசியர்  மேலை நாடுகளில் டாக்டர்கள் நோயாளிகளுக்கு – சிரிப்பு வீடியோக்களைப் பார்க்குமாறு பரிந்துரை செய்கிறார்கள்.

’நேர்மன் கசின்ஸ்’  என்னும் அமரிக்க நாவலாசியாயர் 1983-ம் ஆண்டு தான் எப்படி இதய நோயிலிருந்து நலம் பெற்று வந்தார் என்பதைக் குறிப்பிட்டுள்ளார்.  ”நான் மாரடைப்பு வந்ததுடன்கொழுப்பு சத்துள்ள உணவுகளைத் தவித்தேன். எளிய உடற்  பயிற்சிகளைத் தவறாமல் மேற்கொண்டேன். விளையாட்டு, நடைப்பயிற்சியும் மேற்கொண்ட பிறகு, மீதி நேரங்களில் வயிறு குலுங்கசிரித்து மகிழ்ந்தேன். அதற்கென நகைச்சுவைப் படங்கள் டி வி -யில் பார்த்தேன். நகைசுவை வசனங்களை டேப் ரிக்கார்டில் கேட்டு மகிழ்தேன். என்ன ஆச்சாயம் ? நாளடைவில் என் இதயம் பலப்பட்டுநோய் இருந்த  இடம் சுவடே தெரியாமல் மறைந்து போனது” நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உற்பத்தி செய்யும் வெள்ளை அணுக்களின் உற்பத்தியைச்  ‘சிரிப்பு’ முடுக்கிவிடுகிறது  என்பதைச்சிரிப்பு பற்றி ஆராய்ந்த மருத்துவ அறிஞர் வில்லியம் பிரை தன்னுடைய ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளார்.

 

 சிரிப்பு ஒரு மாமருந்து

சிரிப்பு ஆராய்யும் மருத்துவ அறிஞர்களை ‘ GELOTO LOGIST என்கிறார்கள்.  இவர்கள் பலவித ஆய்வின் மூலம் கண்டறிந்த உண்மைகள் அவைகள். சிரிப்பு  நம்முடைய இரத்தத்தில்அதிகப்படியான ஆக்ஸஜன் இருப்பதற்கான தசைகள்  வலுவடைகின்றன;  ”இரத்த அழுத்தம்” அளவு குறைகிறது.  நுரையீரல் நன்கு செயல்படுகின்றன.
‘என்சீபேலின்ஸ்’ என்ற ஹார்மோனை நம் உடலில் சுரக்கச் செய்து தசைவலியை நீக்க உதவுகிறது சிரிப்பு.
சிரிப்பதனால் இரத்தக் குழாய்கள் விரிவடைந்து ரத்த ஓட்டம் அதிகாக்கிறது. மன  இறுக்கம் தளர்கிறது

சிந்தைக்கும், உணர்ச்சிகளுக்கும் தலைமை பீடமாகச் செயல்படும் – நம் மூளையின் வலப்பக்கப் பகுதி, சிரிப்பினால் நன்கு செயல்படுகிறது. சிரிப்பு- பெப்டிக் அல்சர் போன்ற  இரைப்பைப் புண்கள்வராமலேயே  தடுக்கிறது   உலக வாழ் உயிரனங்களில்  நம்மால் மட்டுமே  சிரிக்க முடியும். சிரிப்பினால் எவ்வளவு நன்மைகள் என்று சிந்தித்து பாருங்கள்.
எனவே, நோய்விட்டுப் போக மனம் விட்டுச் சிரியுங்கள்.  “சிரிக்க தெரிந்த சமுதாய விலங்கு மனிதன்”  என நம்மை மற்ற  இனங்களிலிருந்து வகைப்படுத்தி அறிவியலார் கூறுவதுண்டு. சிரிப்புஎன்பது மனிதனுக்கு மட்டும் உள்ள, மற்ற விலங்கினங்களுக்கு இல்லாத சிறப்பு.

. ”பெர்னாட்ஷ” ஒரு சமயம். ”உண்மையான அறிவு என்பது நகைச்சுவையான சிரிப்பு  பின்னணியிலேயே செயல்படுகிறது’   என்றார். நகைச்சுவையும், சிரிப்பும் அறிவை அளவிட்டு காட்டுகிறது.

நகையும் சுவையும் சிரிப்பும் அறிவு பூர்வமானது  என்பதை மெய்ப்பிக்க,  நமக்கு அக்பர்,  பீர்பால் கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவை சான்றாக  இருக்கின்றன.  அமரர் ‘கல்கி’யின்படைப்புக்கள் நகைச்சுவை முலாம் பூசப்பட்டு மிளிர்பவைதான்.  இன்றைய காலக் கட்டத்தில் நமக்கு கொஞ்சம் நகைச்சுவையும், சிரிப்பும்  பஞ்சம் ஏற்பட்டு  இருப்பதாகவே கூறலாம். சமுதாய சூழ்நிலையும், மன உளைச்சலும் இதற்கு காரணம் கூறலாம்.

.      இந்தப் போக்கு மாறவேண்டும்.நகைச்சுவை உணர்வால் மட்டுமே பொறுமை வளர்க்க முடியும். நண்பர்களிடத்தில் தனித் தோற்றத்தையும், குடும்பத்தினாடம் அதிகம் நெருக்கத்தையும் எந்தவிதமான இடர் பாடுகளையும் எளியதாகக் கையாளவும், சிறப்பாக நமக்கு உதவி செய்கிறது. சிரிப்பது உங்கள் கடமை.   மனிதனின் சோர்வை அகற்றுவது சிரிப்பு.சிரிக்கும் உணர்வு இருந்தால்எத்தனை கொடிய துன்பத்தையும் துரத்தமுடியும்.

மனதுக்குத் தையம் அளிப்பது நகைச்சுவை உணர்வுதான்.  சிரிக்க கூடிய சக்திதான். சிரிப்பு ‘கவர்ந்திழுக்கக்’ கூடியது முகம். சித்த முகத்துடன் இருப்பவர்கள்,..அந்த புன்சிப்புதான் எத்தனை அழகாமனதுக்குத் தைரியம் அளிப்பது நகைச்சுவை உணர்வுதான். சிக்க கூடிய சக்திதான். சிரிப்பு ‘கவர்ந்திழுக்கக்’ கூடியது முகம். சித்த முகத்துடன் இருப்பவர்கள்,.. அந்த புன்சிப்புதான் எத்தனைஅழகானது!!!

இளமையான புன்னகை இனிமையான ஆன்மாவைக் குறிக்கிறது.கண்ணுக்குள் தெரியமால் உள்ளுக்குள் ஒளிந்திருக்கும் அழகை வெளிப்படுத்துவது புன்னகை. ‘மர்ரெ பாங்க்ஸ்’ என்ற தத்துவடாக்டர்,   இன்றைய உலகத்தின் நெருக்கடிகள், கஷ்டங்கள் யாவற்றிலிருந்தும் விடுபட,  சிரிப்பு ஒன்றுதான் வழி.  உங்களால் சிரிக்க முடிகிறது என்றால் நல்ல மனத்தோடு இருக்கிறீர்கள் என்றுபொருள். சிரிப்பு உங்களுக்கு உடல் நலத்தைத் தருகிறது.செல்வத்தைத் தருகிறது.ஏன் அதை நீங்கள் விடவேண்டும்.?

. .நீங்கள் சிரிக்காமல்  இருந்தால் . உலகத்துடன் உள்ள தொடர்பை  இழக்கிறீர்கள். இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் மனம்விட்டு அடிக்கடி சிரிப்பது மிக்க அவசியமாகிறது.     இன்று அவசரயுகம். மனமெல்லாம் குப்பையாச்சு. கூட்டிப் பெருக்கவே   துடைத்து மெழுகவோ காலம் அவகாசம் இல்லாத அவசரத்தனம். துரிதம் இருந்த அளவுக்கு தூய்மை இல்லாமலேயே போய்கொண்டிருக்கவாழ்க்கை.   ஒதுங்கவோ ,சில கணங்கள் ஓய்வாக இருக்க  மனசுக்கு ஆசை உண்டு.    ஆனால், மனுசனுக்கு நேரமில்லை. மனதில் உள்ள ஒட்டடை அடிக்கடி  நேரமில்லா வீடு.  சப்த சாகரத்தில்இருந்து சாமன்ய சந்தைக் கூத்துகளில்   இருந்தும் சற்றே விடும்படியான  சில தருணங்கள் தேவைப் படுகிறதது     அதற்கு மன மகிழ்ச்சியும் , சிரிப்பும் தேவைப்படுகிறது. முகத்தில் தெரிய நாம்சிரிக்கப் பழக வேண்டும்.நகைச்சுவைக்கு ஈடான சுவை வேறில்லை. இறைவனால் அளிக்கப்பட்ட அருள் பிரசாதம். மகிழ்ச்சியைக் காட்ட மனிதன் மட்டுமே    சிரிக்கிறான். மிருங்கள் சிரிப்பதில்லை.

இன்றைய உலகம் இளையர்கள் கையில். இளையர்கள் சிரிப்பை விரும்புகிறார்கள்.நீங்கள் சிரிக்காமல்  இருந்தால் இளையதலைமுறையினரின் நட்பை  இழக்கிறீர்கள். உலகத்துடன் உள்ளதொடர்பை  இழக்கிறீர்கள். இந்த பரபரப்பான வாழ்க்கைச் சூழலில் மனம்விட்டு அடிக்கடி சிரிப்பது மிக்க அவசியமாகிறது.     இன்று அவசர யுகம். மனமெல்லாம் குப்பையாச்சு. கூட்டிப் பெருக்கவே  துடைத்து மெழுகவோ காலம் அவகாசம் இல்லாத அவசரத்தனம். துரிதம்  இருந்த அளவுக்கு தூய்மை இல்லாமலேயே போய்கொண்டிருக்க வாழ்க்கை.   ஒதுங்கவோ ,சில கணங்கள் ஓய்வாக இருக்க  மனசுக்கு ஆசை உண்டு. ஆனால், மனுசனுக்கு நேரமில்லை. மனதில்உள்ள ஒட்டடை அடிக்கடி  நேரமில்லா வீடு. சப்த சாகரத்தில் இருந்து சாமன்ய சந்தைக் கூத்துகளில்   இருந்தும் சற்றே விடும்படியான  சில தருணங்கள் தேவைப் படுகிறதது     அதற்கு மனமகிழ்ச்சியும் , சிரிப்பும் தேவைப்படுகிறது. முகத்தில் தெரிய நாம் சிரிக்கப் பழகவேண்டும்.நகைச்சுவைக்கு ஈடான சுவை வேறில்லை. இறைவனால் அளிக்கப்பட்ட அருள் பிரசாதம். மகிழ்ச்சியைக்காட்ட மனிதன் மட்டுமே    சிரிக்கிறான். மிருகங்கள் சிரிப்பதில்லை.

நகைச் சுவை – சிரிப்பு என்பது அன்பின் விளைச்சலாக இருக்கிறது.சில சிரிப்பில் மனம் புதைந்து விடுகிறது. அதன் அருமையால் கல்லும் பூக்கும், நஞ்சு அமுதமாகும். மனிதன் தேவன்ஆகிறான். சிரிப்பு இன்று தேடப்படும் பொருளாய் புதைந்து போய் உள்ளது. அன்பின் பொங்கலில் உங்கள் மனவெளி வேர்விட்டு வளரட்டும்.. .. விழுது விட்டு வளரட்டும்
நகைச்சுவை அருகிலிருப்பவர்களுக்கு மல்லிகை – தொலைவிலிருப்பவர்களுக்கு மனோரஞ்சிதம்.அதன் பின் செல்பவர்களுக்குச் சொர்க்க வாசல் திறக்கிறது. அன்பு கரம் நீட்டும் இனிய உறவுகள்சஞ்சிவி மருந்தாக இருக்கிறது. நல்ல நகைச்சுவைகளை அனைத்தும் நாம் தனியாக இருந்து சிரித்தாலும் நம்மைப் பற்றி மற்றவர்கள், ”ஆசாமிக்கு கொஞ்சம் மண்டை கிறுக்கு” என எண்ணக்கூடும். ஆகவே,  அதனையும் கருத்தில் – கவனத்தில் கொண்டு சிரிக்கவும்,
மனம் விட்டு சிக்கவும். நலம் சிறக்கும்.

அன்பொடு
கிருஷ்ணன்,
சிங்கை
தமிழ் எமது மொழி
இன்பத்தமிழ் எங்கள் மொழி

………………..
http://ezilnila.com/saivam
http://singaporekovilgal.blogspot.com/

 

News

Read Previous

புன்னகை -புதுசுரபி

Read Next

GOLDEN WORDS

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *