சமத்துவ பொங்கல்
முதுகுளத்தூர் பஜார் தெருவில் செல்லிஅம்மன் கோயிலில் மகளிர் மன்றங்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு இனத்தவரும் சேர்ந்த கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழாவில் மகளிர் மன்ற தலைவி எஸ்.முனீஸ்வரி தலைமை வகித்தார். தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். கலைநிகழ்ச்சி, கோலப்போட்டி, மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.…