அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !
பொங்குகவே பொங்கல் பொங்குகவே
மங்களம் எங்கும் நிறைந்திடவே
மாநிலம் முழுதும் செழித்திடவே
பொங்குகவே பொங்கல் பொங்குகவே !
தித்திக்கும் கரும்பின் சுவையும்
தெவிட்டாத பொங்கலின் ருசியும்
என்றும் வாழ்வில் நிலைத்திடவே
பொங்குகவே பொங்கல் பொங்குகவே !
உலக அமைதியின் ஊற்றுக்கண்ணாய்
உலகசமாதான தூதர்களாய் செயல்படும்
ஒப்புயர்வற்ற தமிழர்களின் வாழ்வில்
பொங்குகவே பொங்கல் பொங்குகவே !
தங்கத் தமிழாம் எந்தமிழை
சந்தம் மாறாமல் முழங்கி
சங்கம் வளர்த்திட்ட தமிழர்வாழ்வில்
பொங்குகவே பொங்கல் பொங்குகவே !
தரணி புகழும் தமிழின்
தலைமகனே தன்மானமிக்க தமிழனே
உங்கள் அனைவரின் வாழ்விலும்
பொங்குகவே பொங்கல் பொங்குகவே !
உலகாளும் உயர்செம் மொழியாம்
எங்கள் தாய்த்தமிழ் மொழியின்
வளர்ச்சிக்கு உழைப்போர் இல்லங்களில்
பொங்குகவே பொங்கல் பொங்குகவே !
அன்புடன் ………….
கவி. செங்குட்டுவன், ஊத்தங்கரை – 635207
அலைபேசி: 9842712109 / 7402732132, தொ.பே: 04341-223011/223023
மின்னஞ்சல்: rajendrankavi@yahoo.co.in/
கவி.செங்குட்டுவன்,
ஊத்தங்கரை – 635207.
அலைபேசி: 9842712109 / 9965634541
தொலைபேசி: 04341- 223011 / 223023
மின்னஞ்சல்: rajendrankavi@yahoo.co.in / kavi.senguttuvan@gmail.com
வலைப்பூ : http://kalvikoyil.blogspot.in