பொங்கல் விழா
முதுகுளத்தூர் அருகே காத்தாகுளம் கிராமத்தில் செம்பு கூத்த அய்யனார் மற்றும் காளியம்மன் கோயில் பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காத்தாகுளம் கிராமத்தில் பருவ மழை வேண்டி காவல் தெய்வமாக அருள் கொண்டு வீற்றிருக்கும் செம்பு கூத்த அய்யனார் மற்றும் காளியம்மன் கோயில் பொங்கல் விழா
மற்றும் குத்துவிளக்கு பூஜை நடைபெற்றது. விழாவிற்கு கிராமத் தலைவர் லெட்சுமணன் தலைமை தாங்கினார். பொங்கல் விழாவை முன்னிட்டு வள்ளி திருமணம் நாடகம் நடைபெற்றது. விழாவிற்கு முதுகுளத்தூர் இன்ஸ்பெக்டர் ஜேசு, எஸ்ஐ சரவணன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.