முதுகுளத்தூரில் திடீர் மழை: கடை கூரைகள் சேதம்
முதுகுளத்தூரில் திடீர் மழையால் கடைகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன.
முதுகுளத்தூர் மற்றும் கடலாடி பகுதிகளில் பல மாதங்கள் மழை பொய்த்துப் போனது. ஆனால் சனிக்கிழமை திடீரென மழை பெய்ததால் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள பூக்கடைகளில் மேற்கூரைகள், தட்டிகள் திடீரென சரிந்து கீழே விழுந்தன. இதில் கடையில் இருந்த சிலர் காயம் அடைந்தனர்.