பொங்கலோ பொங்கல்!!!

Vinkmag ad

மாச்சீர், மாச்சீர், ஓர்விளம் வாய்பாட்டில் அமையும் விருத்தம்
 
 
வாய்க்கால் தண்ணீர் வந்திடும்         வாய்ப்பு மில்லை; பெய்திடும்பேய்போல் வெள்ளம் சூழ்ந்திடும்        பேரா பத்தால் நெற்கதிர்காய்த்து வந்தும் பொய்த்தது       காலம் தோறு மிந்நிலைமாய்த்துக் கொள்ளும் மக்களோ      மங்கிச்  சொல்லும்    “பொங்கலோ”
 
 
பொங்க லன்று பொங்கிடும்         பொங்கற் சோறு போலவே  
எங்கு மின்பம் தங்கிட        எம்வாழ்த் தாலே பெற்றிட        
பங்க மில்லா வாழ்வினைப்        பற்றிப் போற்றி வாழ்ந்திடஅங்க மெங்கும் பொங்கிடும்       அன்பே வாழ்த்தாய்த் தங்கிடும்
  
சோற்றில் கையை வைத்திட       சேற்றில் காலை வைத்திடும்ஆற்றல் மிக்க மக்களை       ஆர்வம் கொண்டு வாழ்த்திடுஏற்றம் பெற்ற ஏரினை      ஏந்திச் சிந்தும் வெற்றியால்மாற்றம் பெற்று முன்வர     மக்க ளெல்லாம் போற்றுவோம்!
 
“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்
எனது வலைப்பூத் தோட்டம் உலா வர வழி:
http://www.kalaamkathir.blogspot.com/

News

Read Previous

சிந்தனைத் துளிகள்

Read Next

இஸ்லாமிய வரலாற்றில் இந்த மாதம் : ஸஃபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *