சிந்தனைத் துளிகள்

Vinkmag ad

காய், காய், காய், காய், மாச்சீர், தேமா வாய்பாட்டில் அமையும் விருத்தம்:
 
 
 
 தெளிவாக சிந்தித்து நிம்மதியாய் முடிவுகளைத் தெரிவு செய்வாய்
 களிப்பான நேரத்தில் இறைவனது வழிபாட்டுக் கடமை செய்வாய்   
 வெளிப்பார்வைப் பேச்சினிலே மயங்காது நண்பரிடம் விரக்தி கொள்வாய் 
 குளிப்பாட்டும்  முடிவுடனே பழகுபவர் நரியினது குணமாய்க்  காண்பாய்
     

 
 
 வாக்கெல்லாம் மீறிடுவர் சகவாச மில்லாது  வெறுப்புக் கொள்வாய்
 நாக்கெல்லாம் பொய்யென்னும் தேன்தடவிப் பேசுபவர் தனைநா டாதே   
 போக்கெல்லாம் கோள்பேசித் திரிவோரைக் கண்டதுமே  புறமே ஓட்டு  
 நோக்கெல்லாம் சுயநலமாய் நெருங்கிவரும் மனிதரிடம் நெருங்கா தோடு
 
 
 
“கவியன்பன்”கலாம், அதிராம்பட்டினம்
எனது வலைப்பூத் தோட்டத்திற்கு உலா வர வழி:
http://www.kalaamkathir.blogspot.com/

News

Read Previous

தோல்வியை தோல்வி அடையச் செய்வோம்

Read Next

பொங்கலோ பொங்கல்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *