கடைகளை அகற்ற எதிர்ப்பு: சாலை மறியலுக்கு முயற்சி
முதுகுளத்தூரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலுக்கு முயன்றனர். முதுகுளத்தூர் சரவணப் பொய்கை ஊரணியின் கிழக்கில் மீன்கடைகள் உள்ளன. ஆக்கிரமிப்பில் உள்ளதாகக் கூறி அதை அகற்றுவதற்கு பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கந்தசாமிபுரம், காமராஜர்புரம், பர்மா காலனி, உழவன்தோப்பு காலனி, மீனாட்சிபுரம் காலனி,…