முதுகுளத்தூரில்கடையை உடைத்து ரூ.4.60 லட்சம் திருட்டு
முதுகுளத்தூரில் புதன்கிழமை இரவு பலசரக்குக் கடையின் மேல் பகுதியை உடைத்து 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் தனியார் பள்ளி அருகில் ஏனாதி பூங்குளத்தைச் சேர்ந்த சுந்தரவேல் மகன் தெட்சணாமூர்த்தி (33) பலசரக்குக்கடை வைத்துள்ளார். புதன்கிழமை இரவில் வழக்கம் போல் கடையை அடைத்து விட்டு தனது ஊருக்கு சென்று விட்டார்.
காலையில் கடையை திறந்து பார்த்தபோது கடையின் மேல் பகுதி உடைக்கப்பட்டிருந்தது. அதன் வழியாக உள்ளே நுழைந்த திருடர்கள் கடையில் இருந்த ரூ.4 லட்சத்து 60 ஆயிரத்தைக் காணவில்லை. இதுகுறித்து கடை உரிமையாளர் முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.