பங்கேற்பு முகாம்
சாயல்குடி:இதம்பாடலில், ஊரக மக்களின் பங்கேற்பு முகாம் நடந்தது. ஊராட்சி தலைவர் ஜபாகிர்பேகம் தலைமை வகித்தார். வேளாண் உதவி இயக்குனர் ஜாய்லின் ஜோபியா வரவேற்றார். தமிழ்நாடு நீர் வடிப்பகுதி செயல் இயக்குனர் சுரேஷ்குமார், துணை இயக்குனர் கமாலுதீன், இணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பண்ணைக்குட்டைகள் அமைத்து விளைச்சல் பெறுவது, கண்மாய், ஊரணிகளை ஆழப்படுத்தி குடிநீர் ஆதாரத்தை பெருக்குவது குறித்து விளக்கினர். மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
நீர்வடிப்பகுதி உறுப்பினர்கள் முருகானந்தம், தீனதயாளன், சிறைக்குளம் ஊராட்சி தலைவர் ரமேஷ்பாபு பங்கேற்றனர்.