டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

Vinkmag ad

முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி செல்லி அம்மன்கோவில் தெருவில் வசிக்கும் மக்கள், மாவட்ட ஆட்சியரிடம்

கோரிக்கை மனு வழங்கியுள்ளனர்.

மனுவில் உள்ளவை: முதுகுளத்தூரில் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை, காந்திசிலை, சாக்குளம் விலக்கு ரோடு ஆகிய நான்கு இடங்களில் டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடை வழியாகத்தான் மாணவ,மாணவிகள் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. போதையில் சிலர் அவ்வழியில் செல்லும் மாணவிகளிடம் தாகாதவார்த்தையால் பேசுவதாக பெற்றோர்களிடம் கூறுகின்றனர்.

கடைக்கு அருகில் உள்ள செல்லி அம்மன் கோயிலுக்கு சாமிகும்பிட செல்லும் பெண்கள் கடையின் வழியில் செல்லும் போது முகம் சுழிக்கின்றனர்.

எனவே இந்தக் கடையை அந்த இடத்தில் இருந்து மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக முதுகுளத்தூர் தாசில்தார் ரவீந்திரன் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

News

Read Previous

ஏப்ரல் 20, மதுரையில் முதுகுளத்தூர் கிளை ஜமாஅத் மகாசபைக் கூட்டம்

Read Next

துபையில் ஆஸ்திரேலிய மருத்துவருடன் முதுகுளத்தூர்.காம் ஆசிரியர் சந்திப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *