கலங்கரை விளக்கு
சேகரப் புதையலே நட்பு சோதனை விடைகளே நட்பு சாகர விடியலே நட்பு சாதனைத் தூண்டுதல் நட்பு தாகமேத் தீர்த்திடும் நட்பு தாயினைப் போலவே நட்பு வேகமாய்ச் செயல்படும் நட்பு வேரிலே உறுதியாம் நட்பு கலங்கிடும் பொழுதினில் எமக்கு கலங்கரை…
சேகரப் புதையலே நட்பு சோதனை விடைகளே நட்பு சாகர விடியலே நட்பு சாதனைத் தூண்டுதல் நட்பு தாகமேத் தீர்த்திடும் நட்பு தாயினைப் போலவே நட்பு வேகமாய்ச் செயல்படும் நட்பு வேரிலே உறுதியாம் நட்பு கலங்கிடும் பொழுதினில் எமக்கு கலங்கரை…
மூலமே மெய்யென்பேன் மற்றவைப் பொய்யென்பேன் கோலமாய் மாறியேக் கொண்டாடும் மாயையாம் வீட்டுக்குள் ளுறங்கும்நீ வீதியே வீடென்று நோட்டத்தி லறிவாயே நான்கு சுவரின்றி நீர்க்கு மிழியைநீ நீரென்ற றிதலேமெய் பார்க்கு மிடமெல்லாம் படைப்ப்பினை யாய்வுசெய் பொய்யென்னும் திரையினைப் போக்கி மனக்கண்ணால் மெய்நிலைக் காண முயல். ” கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்…
எந்தேசம் காணுமே இன்று விடுதலைச் சந்தோசக் கொண்டாட்டச் சங்கமம்- இந்நேரம் பாட்டின் தலைப்பிலும் பாரதம் என்பதைப் போட்டேன் பொருத்தமாய்ப் போச்சு (வெண்பா) ******************************************************************** நுனிநாக்கி லாங்கிலம் நுட்பக் கணினி தனியார்வ நோக்கில் தணியாத தாகம் இனியென்ன வேண்டுமிங் கிந்தியர் என்றும் நனிசிறந்தே வாழ்வர் நவில். ************************************************************(வெண்பா) கடின உழைப்பும்…
இரவும் பகலும் மாறும் இறைவன் வகுத்த நியதி வரவும் செலவும் சேரும் வணிகக் கணக்கின் நியதி இரவு மட்டு மிருந்தால் இயங்க மறுக்கு முலகம் வரவு மட்டு மிருந்தால் வணிக வளர்ச்சி விலகும் உறவும் பிரிவு மிணைந்து ஊடலும்…
எல்லை வரம்பினுள் எல்லாம் படரவே எல்லைப் பிடியி லெதுகைத் தொடரவே எல்லைத் தவறா இனிமைத் தொடையுடன் சொல்லின் சுவையெனும் சொந்தப் படையுடன் வல்லமைக் காட்டும் வளமிகு மோனையும் மெல்ல நகர்த்திட மெல்லிசைச் சேனையும் வெல்லு மணியாய் விரைவுடன் பந்துப்பா நில்லா உதையும் நெடுகிலு மிந்தப்பா வெல்லம் கலந்த வரிசையாம் …
சேகரப் புதையலே நட்பு சோதனை விடைகளே நட்பு சாகர விடியலே நட்பு சாதனைத் தூண்டுதல் நட்பு தாகமேத் தீர்த்திடும் நட்பு தாயினைப் போலவே நட்பு வேகமாய்ச் செயல்படும் நட்பு வேரிலே உறுதியாம் நட்பு யாப்பிலக்கணம்: விளம், விளம்,மா…
ஊடகம் பேசிடும் தன்மை ஊனமாய்ப் போகுதே உண்மை நாடகம் போடுதல் கண்டு நாணமே நாணிடும் ஈண்டு பாடமும் பாடலும் நம்மை பார்த்திடும் தோரனை வெம்மை வேடமேப் போடுதல் என்றும் வேகமாய்த் தீர்த்திட நின்று தீவிர வாதியாய்க் காட்டி தீர்த்திட ஏனிதில் போட்டி?…
கல்லினை உளியால் நீக்கி கவின்சிலைப் படைக்கும் சிற்பி சொல்லினைச் சீராய்க் கோர்க்கும் சொல்வனம் புலவன் யாப்பில் நெல்லினை விதைத்து ஆவல் நெருங்கிடக் காக்கும் வேளாண் வில்லென வளைந்து நெற்றி வியர்த்திட உழைக்கும் போழ்தும் வல்லமை முயற்சி தந்த வழிகளின் துணிவு என்போம்…
மா, மா, காய் (அரையடிக்கு) வாய்பாட்டில் அமையும் அறுசீர் விருத்தம் மொட்டின் மவுனம் வாசனையாம் மொழியின் மவுனம் வார்த்தையாம் கொட்டித் தீர்க்கும் மழையுந்தான் கூடும் முகிலின் மவுனந்தான் தட்டிக் கேட்கும் புரட்சிகூட தங்கும் மவுன வெளிப்பாடே மட்டில் பேரா பத்துகளும் …
கற்பனைத் தானே வாழ்வினைக் காட்ட கருவுடன் எண்ணமாய் வார்க்கும் அற்புதச் செயல்கள் விளைந்திட வைக்கும் அனைத்திலும் கற்பனைப் பூக்கும் நற்பலன் கிட்ட எதிர்வரும் காலம் நம்பியேத் துணிவுடன் செல்லும் பற்பல கடமை யாவுமே எண்ணப் பயனென உறுதியாய்ச் சொல்லும் கனவெனும்…