இராமநாதபுரம்
போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு – உறுதிமொழி ஏற்பு

போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” என்ற நோக்கில் மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழியேற்பு கூட்டமானது துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றதை தொடர்ந்து, திமுக பரமக்குடி மேற்கு ஒன்றிய இளைஞர் அணி துணை அமைப்பாளர் திரு கல்பனா N. ஆனந்த் அவர்களின் ஏற்பாட்டில் கமுதக்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் திரு காதர்பாட்சா முத்துராமலிங்கம் MLA அவர்கள் மாணவர்களுடன் இணைந்து உறுதிமொழியேற்று, பின்னர் பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் உள்ளிட்ட அக்கட்சியினர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.





