இராமநாதபுரம்
வினாடி வினா போட்டி : பாராட்டு

கீழக்கரை, ஹமீதியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், துளிர் வினாடி வினா போட்டியில் வட்டார அளவில், மண்டல அளவில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியிலும் முதலிடம் பெற்று நம் பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். முதலிடம் பெற்ற மாணவிகளான A.முகம்மது அல் அஷீலா-XII, U.அஃப்ரின் ஜஃப்னா-XI, H.ஹபீப் ஆயிஷா-XI மற்றும் பயிற்சி அளித்து ஊக்குவித்த ஆசிரியரான V.பத்மாவதி அவர்களையும் பள்ளியின் தலைமை ஆசிரியை திருமதி. ஜெ. ஜாக்குலின் லதா பெஸ்டஸ் அவர்கள் பாராட்டி மகிழ்ந்தார்கள்





