தேவிபட்டினம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் மகேஷ் குமார் உடலுக்கு அமைச்சர், கலெக்டர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்…..

தேவிபட்டினம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் மகேஷ் குமார் உடலுக்கு அமைச்சர், கலெக்டர், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்…..

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காவல் நிலைய எல்லைக்கு.ட்பட்ட பகுதியில் அதிகாலையில் மணல் கடத்தலில் ஈடுபட்ட டிராக்டரை உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் பறிமுதல் செய்து தேவிபட்டினம் காவல் நிலையத்திற்கு தலைமை காவலர் மகேஷ் குமார் ஓட்டி வந்தபோது ராமநாதபுரம்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நாகர்கோவிலில் இருந்து வேளாங்கண்ணி நோக்கி சென்ற அரசு பேருந்து எதிர்பாராத விதமாக டிராக்டரின் பின்பக்கத்தில் மோதியதில் தலைமை காவலர் மகேஷ் குமார், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தையொட்டி அன்னாரது உடல் மருத்துவ பரிசோதனைக்காக ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டு அன்னாரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மருத்துவர் ராஜீவ் அண்ணாரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன் உள்ளார்.




