மீலாது நபி வாழ்த்துக்கள்
மீலாது நபி வாழ்த்துக்கள்
அரேபியாவின் மெக்காவில் ,
ஆனை வருடத்தில் இறைவன்
அல்லாஹ்வின் தூதராய்
அவதரித்தார் நபிகள் நாயகம்
அல்லா ஒருவரே கடவுள்
எல்லாப்புகழும் இறைவனுக்கே .
அவர் காட்டும் வழியினிலே
அனைவரும் நடந்திடவே
அருமறையாம் குர் -ஆனை
அளித்திட்ட தவ சீலர் .
வறியவர்க்கு ஈதலும்
வேளை தவறாத தொழுகையும்
இஸ்லாத்தின் இருகண்கள்
மனித நேயமே புனித நேயம்
என்றுரைத்த புனிதரவர்.
பெண்களுக்கு மரியாதை தருதல்
பெருமைக்குரியதென்று உரைத்தவர்.
அஸ்ஸலாமு அலைக்கும் என்று
அனைவருக்கும் வணக்கம் செய்திடுவோர்
வாலைக்கும் அஸ்ஸலாமு என்று
பதில் வணக்கம் செலுத்திடுவோர் .
இன்ஷா அல்லாஹ் என்று அல்லாஹ்வின்
இஷ்டப்படி வாழ்ந்திடுவோர்
மாஷா அல்லாஹ் என்று அல்லாஹ்வின்
கருணையில் வாழ்ந்திடுவோர்
நபிகள் நாயகம் வகுத்த
திருக் குர்ஆனில் உள்ளதுபோல்
வன்முறையைத்தான் தவிர்த்து
நன்முறையில் வாழ்ந்திடுக.
அமைதி மார்க்கம் பின் பற்றி
இஸ்லாமியச் சமுதாயம்
எங்கெங்கும் வளர்ந்திடுக .
இவ்வுலகும் தழைத்திடுக .
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் 05.09.2025.
