கவிதைகள் (All)

உத்தமர் திருவள்ளுவர் வாழியே !

உத்தமர் திருவள்ளுவர் வாழியே !
“””””””””””””””””””””””””””””””””””””””””””
உன்னத மொழியாம் தமிழில்
உலக பொது மறையாம் குறளை
மானிடம் பயனுற படைத்தவராம்
உத்தமர் திருவள்ளுவர் வாழியவே

அகரமுதல எழுத்தெல்லாம்—-என
தொடங்கி அதிகாரங்கள் நூற்றி
முப்பத்து மூன்றில் அறம், பொருள்
இன்பம் முப்பாலில் அகிலத்தை வைத்தார் உத்தமர் திருவள்ளுவர் வாழியவே

மதம், இனம், சாதி,வேறுபாடு
மனித வாழ்வுக்கு கேடு
என்றே மனிதநேயம் சொன்னவர்
உத்தமர் திரு வள்ளுவர் வாழியவே

                  தஞ்சை. ந. இராமதாசு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button