இராமநாதபுரம்

புஜேராவில் ஜிக்னேச்சர் ஜிகர்தண்டா திறப்பு விழா

புஜேராவில் ஜிக்னேச்சர் ஜிகர்தண்டா திறப்பு விழா

புஜேரா:
புஜேரா லூலூ மால் வணிகவளாகத்தில் ஜிக்னேச்சர் ஜிகர்தண்டா நிறுவனம் கடந்த வியாழக்கிழமை 28 ஆகஸ்ட் 2025 அன்று புதிதாக திறக்கப்பட்டது.
இந்த நிறுவனத்தை ஜிக்னேச்சர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி முஹம்மது பாசில்,
தலைமை வளர்ச்சி அதிகாரி முஹம்மது ரஹ்மத்துல்லா, மேக் குழுமத்தின் மேலாண்மை இயக்குநர் முஹம்மது இசாக் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் ஜிக்னேச்சர் மத்திய கிழக்கு பகுதி தலைமை விற்பனை அதிகாரி அப்துல் சலாம், புஜேரா லூலூ மால் நிர்வாகக்குழுவினர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த புதிய நிறுவனம் இந்தியா, பக்ரைன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்பட்டு வருகிறது. புஜேராவில் 121 வது புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button