வேலைக்காரப் பெண் புகார்: கடை உரிமையாளர் கைது

Vinkmag ad

முதுகுளத்தூரில் பெண்ணை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த கடை உரிமையாளரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

 சாயல்குடி யாதவர் நகரைச் சேர்ந்த முனியசாமி மகன் சக்திவேல் (49). இவர் முதுகுளத்தூர் பேருந்து நிலையம் அருகில் புகைப்படம் எடுக்கும் கடை வைத்துள்ளார். இந்தக் கடையில் தேரிருவேலி அருகில் உள்ள உத்தன்    கிராமத்தைச் சேர்ந்த ரெங்கன் மனைவி ராஜேஸ்வரி(30) பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடை உரிமையாளர் சக்திவேலுக்கும், ராஜேஸ்வரிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ராஜேஸ்வரியை, சக்திவேல் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

 இது குறித்து முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் ராஜேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் சக்திவேல் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனர்

News

Read Previous

முதுகுளத்துாரில் சாலையில் வீணாகும் காவிரி குடிநீர் பொதுமக்கள் கடும் அவதி

Read Next

யாதவர் சங்க நிர்வாகிகள் தேர்வு

Leave a Reply

Your email address will not be published.