திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் ஊழியர் கூட்டம்

Vinkmag ad

முதுகுளத்தூர் தொகுதியில், முதுகுளத்தூர், கமுதி, கடலாடி ஆகிய இடங்களில் புதன்கிழமை காங்கிரஸ் ஊழியர் கூட்டம் நடைபெற்றது.

  முதுகுளத்தூரில் காங்கிரஸ் காரியாலயத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மலேசியா எஸ். பாண்டியன் தலைமை வகித்தார்.

 காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் வேலுச்சாமி, திமுக முன்னாள் மாவட்டச் செயலர் சு.ப. தங்கவேலன், நகர் தலைவர் ஷாஜகான், திமுக ஒன்றியத் தலைவர்கள் முத்துராமலிங்கம் (மேற்கு)பூபதிமணி (தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 இதில், கூட்டணிக் கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். முடிவில், நகரத் தலைவர் என். சுரேஷ்காந்தி நன்றி தெரிவித்தார்.

   அதேபோல், கமுதியில் நடைபெற்ற ஊழியர் கூட்டத்துக்கு, காங்கிரஸ் வேட்பாளர் மலேசியா எஸ். பாண்டியன் தலைமை வகித்தார். மாவட்ட எஸ்.சி. பிரிவு  தலைவர் சரவணகாந்தி, வட்டாரத் தலைவர்கள் நவநீதன், கதிர்வேல், அபிராமம் போத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 முடிவில், நகர் தலைவர் கோவிந்தன் நன்றி தெரிவித்தார்.

  கடலாடியில் நடைபெற்ற ஊழியர் கூட்டத்துக்கு, வேட்பாளர் மலேசியா எஸ். பாண்டியன் தலைமை வகித்தார்.

 திமுக ஒன்றியச் செயலர் டி. ராஜசேகர், கிழக்கு வட்டாரத் தலைவர் தனசேகரன், மேற்கு வட்டாரத் தலைவர் சுப்பிரமணிய சேர்வை, ஒன்றியத் துணைச் செயலர் கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  முடிவில், காங்கிரஸ் நகர் தலைவர் சுரேஷ்காந்தி நன்றி தெரிவித்தார்.

News

Read Previous

முதுகுளத்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்

Read Next

தமிழ் ஆய்விதழ்கள் பட்டியல்

Leave a Reply

Your email address will not be published.