தாயம்
-
தாயம் -ஈரோடு கதிர்
சாணி மெழுகிய சிமெண்ட் தளத்தில் சுண்ணாம்புக் கட்டியில் கட்டங்கள் வரைந்து மலைகளுக்கு பெருக்கல் குறியிடுவாய்! உனக்கு நாலு புளியங்கொட்டை அதை நீ காய் என்பாய் எனக்கு நாலு கொட்டமுத்து.. அதை நான் நாய் என்பேன் கட்டை உருட்டிய கணமே உன் கண்கள் தாவித்தாவி கட்டங்கள் கணக்கிட்டு காய் எடுத்து வைப்பாய் என் உருட்டல்களுக்கு என் நாய்களையும் நீயே நகர்த்துவாய் நகர்த்தும் விரல்களின் சிருங்கார நடனத்தில் மட்டும் நான் லயித்திருப்பேன்…
Read More »