இராமநாதபுரம்
திருப்பலி

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள புனித அலங்கார மாதா அன்னை ஆலயத்தில் நடைபெற்ற நவநாள் திருப்பலி மற்றும் சிறப்புத் திருத்தேர் பவனியில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். சிவகங்கை மறை மாவட்ட முன்னாள் ஆயர் சூசை மாணிக்கம், பரமக்குடி பங்குத்தந்தை இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலிக்குப் பிறகு, மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. பங்கு பணியாளர்கள் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்திருந்தனர்.





