தமிழ்நாடு
திருச்சியில் நடந்த விழாவில் பரமக்குடி ஆசிரியருக்கு அன்பாசிரியர் விருது

திருச்சியில் நடந்த விழாவில் பரமக்குடி ஆசிரியருக்கு அன்பாசிரியர் விருது

திருச்சி :
ஹிந்து தமிழ் திசை நாளிதழ் சார்பில் அன்பாசிரியர் விருதினை பள்ளிக் கல்வி அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் நடைபெற்ற விழாவில் பரமக்குடி கே.ஜே.இ.எம். மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் கே.ஏ. ஹிதாயத்துல்லாவுக்கு வழங்கி கௌரவித்தார். இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக இந்த விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ராம்ராஜ் காட்டன் உரிமையாளர் மற்றும் ஹிந்து தமிழ் திசை நாளிதழ் முதன்மை ஆசிரியர் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.



