கவிதைகள் (All)

பெத்த மனசு

சும்மா சும்மா
ஊரைச் சுத்திட்டு இரு
செக்கு மாடாட்டம்.

படிப்பும் வேலையும்
லேகியம் மாதிரி
பாட்டில்ல வராதுடா
உருட்டி விழுங்க…

ஏழு கழுதை வயசாச்சு
பொறுப்பு மட்டும் வரலை
பொறுக்கிப் பசங்க சகவாசம்
இன்னும் விடலை.

அப்பாவின் திட்டுகளில்
இல்லாத தன்மானம்
சொல்லாமல் எழும்ப
வெளியேறும் மகனை

கொல்லையில் நிறுத்தி
சொல்லுவாள் அன்னை.
‘மத்தியானம் மறக்காம
சாப்பிட வந்துடுப்பா’

ஆக்கம்: எஃப்.எச். எம். அம்ஜத்
கொழும்பு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button