இராமநாதபுரம்தமிழ்நாடுமுதுகுளத்தூர்
சக்தி சாதனையாளர் விருது பெற்ற முதுவை சம்சுல் ஹுதா

சக்தி சாதனையாளர் விருது பெற்ற முதுவை சம்சுல் ஹுதா

சென்னை :
சக்தி சாதனையாளர் விருது பெற்றார் முதுவை சம்சுல் ஹுதா பானு.
இவர் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் ஆவார்.
தற்போது சென்னையில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
பள்ளிப்படிப்பில் உயர்நிலைக் கல்வியை முடிக்காத நிலையிலும்
எழுத்தார்வத்தின் காரணமாக தொடர்ந்து நூல்களை எழுதி வருகிறார்.
இதுவரை மூன்று நூல்களை எழுதியுள்ளார்.
இதில் ஒரு நூல் தான் பிறந்த முதுகுளத்தூர் நகரில் வசித்த
மனிதர்களை நினைவு கூறும் வகையில் பதிவு செய்துள்ளார்.
தொழில் முனைவோராகவும் இருந்து வருகிறார்.
சென்னையில் சமீபத்தில் நடந்த விழாவில் முன்னாள் மேயர் சைதை துரைசாமி
சக்தி சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தார்.
அவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.





