இராமநாதபுரம்
பெரும் கஞ்சா பறிமுதல்! இலங்கைக்கு கடத்த முயன்ற 292 கிலோ கஞ்சா – 3 பேர் கைது

பெரும் கஞ்சா பறிமுதல்! இலங்கைக்கு கடத்த முயன்ற 292 கிலோ கஞ்சா – 3 பேர் கைது

இராமநாதபுரம் அருகே புதுமடம் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 292 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள்:
- தங்கராஜ்
- சேகர்
- செந்தில் வேலன்
கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா மூட்டைகளை போலீசார் சோதனையிட்டு பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இராமநாதபுரம் கடலோர பகுதியில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.




