பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் வெண்கல சிலை திறப்பு விழாவில் நலத்திட்ட உதவி

பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் வெண்கல சிலை திறப்பு விழாவில் நலத்திட்ட உதவி

இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகேயுள்ள தாமரைக்குளம் கிராமத்தில் முன்னாள் முதல்வர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் வெண்கல சிலை திறப்பு விழா நடைபெற்றது. இதில் திமுக இராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் கலந்து கொண்டு பெருந்தலைவர் சிலையை திறந்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றினார். பின்பு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்வில் மண்டபம் ஒன்றிய கழகச் செயலாளர்கள் பிரவீன், முத்துக்குமார், இராமநாதபுரம் நகர் மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர் தண்டபாணி சிவலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எர்ணாவூர் நாராயணன், முதுகுளத்தூர் மத்திய ஒன்றிய கழக செயலாளர் கோவிந்தராஜ் மற்றும் திமுக நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.




