கட்டுரைகள்
-
ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் எலும்புகள் பலமாகும்
ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் எலும்புகள் பலமாகும்: ஆய்வில் தகவல் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் உடலில் உள்ள எலும்புகள் பலமடையும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆலிவ் எண்ணெயில் உயர்தர வைட்டமின் A,D,E, K மேலும் பீட்டா கரோட்டின் மேலும் ஆன்டி ஆக்சிடன்கள் உள்ளது.இது புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மேலும் ஆலிவ் எண்ணெயில் உள்ள மேனோ ஆன்சாச்சுலேரேட்டர்ஃபேட்டிஆசிட் MUFA ஆனது கெட்ட கொழுப்புகளையும் மேலும் டிரைகிளிசரைட்ஸ் போன்றவைகளையும் இது குறைக்கிறது.இது உயர் இரத்தம் அழுத்தத்தையும் இதய நோய்களையும் பாதுகாக்கிறது. ஆலிவ் ஆயிலில் மிக உயர்ந்த போலிக் அமிலம் உள்ளது. இது மார்பகப்புற்றுநோயை வராமல் தடுப்பதுடன், மார்பகப்புற்றுநோய் இருப்பவர்களுக்கு குணப்படுத்துவதற்கும் உதவும் என்று கண்டறியப்பட்டுள்ளது. இது சர்க்கரைநோயைக் கட்டுப்படுத்தவும், எலும்பு சம்பந்தப்பட்ட நோய்கள் வரவிடாமல் தடுக்கவும் கற்கள் உருவாவதையும்கட்டுப்பத்துகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். சமையலில் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தும் பழக்கம் இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில்அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆலிவ் எண்ணெயின் மருத்துவ குணம் தொடர்பாக ஸ்பெயினின் கிரோனாபகுதியில் உள்ள மருத்துவ ஆய்வு நிறுவனம் சார்பில் ஆராய்ச்சி நடத்தப்பட்டது. டாக்டர் ஜோசப் ட்ருயிட்டாதலைமையில் 2 ஆண்டுகள் இந்த ஆய்வு நடைபெற்றது. ஆலிவ் எண்ணெய் எலும்புகளுக்கு வலுவளிப்பது ஆய்வில்கண்டறியப்பட்டுள்ளது. எலும்பு பாதிப்பால் அவதிப்படுபவர்கள் பட்டியல் மருத்துவக் குறிப்புகளில் இருந்து தயாரிக்கப்பட்டது. இந்தஆய்விற்காக 55 முதல் 80 வயதுவரை உடைய 127 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு ஆலிவ் எண்ணெயில்தயாரிக்கப்பட்ட உணவுகள் தொடர்ந்து வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இந்த ஆய்வின் போது எலும்புதொடர்பான பாதிப்புகளில் உள்ளவர்களின் எலும்புகள் வலுவடைந்து இருந்தது தெரியவந்தது. இதனையடுத்துஎலும்புகளை உறுதிப்படுத்தும் குணம் ஆலிவ் ஆயிலுக்கு இருப்பதை டாக்டர்கள் உறுதி செய்துள்ளனர். ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் மார்பக புற்று நோயை தடுக்கும். கட்டித் தங்கத்தின் விலை எட்டிப்பிடிக்க முடியாத அளவு…
Read More » -
கருத்துக்கு கருத்தால் பதில் சொல்வோம்
ஷேக் அகார் சிறந்த சிந்தனையாளர். அவ்ரது உரையில் கூறப்பட்ட கருத்துக்களை பின்பற்ற முயற்சி செய்ய வேண்டும். சிறப்பான உரை. அச்சில் எடுத்து முஸ்லிம்களிடையே பரப்பவேண்டியது அவசியம்.…
Read More » -
ஆதிச்சநல்லூர் அகழாய்வும் தமிழர் பண்பாட்டுத் தொன்மையும்
தமிழகத்தில் 100 க்கும் மேலான இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த அகழாய்வுகள் தமிழ் நிலத்தின், அதன் மக்களின் தொடக்க கால வரலாற்றையும் பண்பாட்டையும் குறித்த ஒளிவெள்ளத்தை பாய்ச்சி…
Read More » -
கண்ணதாசனின் இதயச் சுரங்கத்துள்தான்…..
“ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல் “என எழுதிய கண்ணதாசனின் இதயச்சுரங்கத்துள்தான் எத்தனை கேள்வி…? கவியரசர் கண்ணதாசன் பற்றி அவரது மகன் காந்தி கண்ணதாசன் சொன்ன ஒரு செய்தி : செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் பதினான்கு வயசுப் பையனாக சென்னை வந்தார்கவியரசு கண்ணதாசன். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா கடற்கரையில் காந்திசிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்து படுத்திருக்கிறார் கவிஞர். நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. நகரத்தார் விடுதிக்குப்போக வேண்டும். இரவு மண்ணாடி வரை நடந்து போக முடியாது. அதனால் கடற்கரையில்படுத்துக் கொள்ள அனுமதி கேட்ட அந்தப் பதினான்கு வயதுப் பையனின் கோரிக்கையைப்போலீஸ் நிராகரித்தது. “படு…படுக்கணும்னா நாலணா கொடு” என்று காவல் மிரட்டியது.நாலணாவுக்கு வழியின்றிக் கலங்கிய கண்களுடன் காந்தி சிலையில் இருந்துநடந்திருக்கிறார் கண்ணதாசன். அவர் வளர்ந்து கவியரசாகி “சுமைதாங்கி” என்ற சொந்தப்படம் எடுக்கிறார். கதாநாயகனாகநடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்திசிலையைத் தேர்ந்தெடுத்தார். நள்ளிரவு படப்பிடிப்பு. ஆனால் படத்தில் இரவு ஏழு மணி மாதிரிஇருக்க கடற்கரை ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும். ஏழு கார்களை நிற்கவைத்து மாறிமாறி ஒன்றன்பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள். தன வீட்டில்உள்ளவர்களிடம் இந்தப் படத்தைப் பார்த்து கண்ணதாசன் என்ன சொன்னார் தெரியுமா..? “இந்தக் கார்களை கவனித்தீர்களா? இவை எல்லாமே நம்முடைய கார்கள். வாழ முடியும்என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லைஎன்று போலீஸ் நடக்கவிட்டது… இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம்எடுத்திருக்கிறேன். நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது” என்றாராம். அந்தப் பாடல்…. மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம் வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம் துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம் குணம்! குணம்! அது கோவிலாகலாம்… மனிதன் என்பவன் தெய்வமாகலாம் வாரி வாரி வழங்கும் போது வள்ளலாகலாம் வாழை போல தன்னை தந்து தியாகியாகலாம் உறுதியோடு மெழுகு போல ஒளியை வீசலாம்
Read More » -
வானொலி உரை
மலேஷிய வானொலியில் முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ வழங்கிய உரையின் தொகுப்பு பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் அளவில்லா அருளும் நிகரில்லா அன்பும் கொண்டு…
Read More » -
புனித நோன்பின் பத்து தத்துவங்கள் – முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ
விண்ணும் மண்ணும் விதி கடலும் வானும் கதிரும் விண்மீனும் பொன்னும் பொருளும் வான்முகிலும் பச்சை மரமும் இலை கொடியும் எண்ணில் அடங்காப் புகழ்ச்சிதனை என்றும் புகழும் என்னிறைவா…
Read More » -
கால்பந்தில் மின்சாரம்
அறிவியல் அதிசயங்கள் K.A. ஹிதாயத்துல்லா M.A.,B.Ed.,M.Phil., கால்பந்தில் மின்சாரம் பவர் கட், தமிழ்நாட்டின் தற்போதைய தலையாய பிரச்சினை இது தான். எதிர்கட்சியினர் ஆளும் கட்சியையும், ஆளும் கட்சியினர்…
Read More » -
மூன்றாம் உலகப் போர் நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர் ஆற்றிய உரை
நந்தவனத்தில் மல்லிகை – மருக்கொழுந்து – ரோஜா என மலர்கள் இருப்பதைப் போல கதை, கற்பனை, அறிவியல் என பல்வேறு கூறுகளும் இணைந்து படிப்பதற்கு பரவசத்தையும் இருள்…
Read More » -
கணியம் கணிநுட்பக் கட்டுரைப் போட்டி
மென்விடுதலை நாள் (Software Freedom Day) 2012 தனை முன்னிட்டு கட்டற்ற கணிநுட்ப ஆய்வுக் கட்டுரை போட்டி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். விவரங்கள் பின்வருமாறு: நோக்கம் தமிழில்…
Read More » -
தமிழால் நான் உயர்ந்தேன்!! :மா.ஆண்டோ பீட்டர்
அன்புச் சகோதரர் ஆண்ட்டோ! மரக்கட்டைகளினூடே சிறுகன்றாய் முட்டிமோதி முளைவிடும் தருணமதில் புயலாய் சுழட்டியடித்த வீச்சில் பொருளாதாரமும் வாழ்வாதாரமும் கேளிவிக்குறியாகிப்போக சிறுகன்றும் சீர்தூக்கி வாழும் வகையறிந்து வல்லமையாய் வடிவாய்…
Read More »