மண் சுவர் விழுந்து 6 ஆடுகள் சாவு

Vinkmag ad

முதுகுளத்தூரில் வெள்ளிக்கிழமை காற்றுடன் பெய்த பலத்த மழையில் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து, அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த 6 ஆடுகள் உயிரிழந்தன.

   முதுகுளத்தூர் மறவர் தெருவைச் சேர்ந்த முத்துக்கருப்பன் (57). இவர் தனது 6 ஆடுகளை இரவில் வீட்டின் அருகில் கட்டிப் போட்டிருந்தார். அப்போது, இடியுடன் பலத்த மழை பெய்ததில் வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்தது. இதில், அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த 6 ஆடுகளும் உயிரிழந்தன.

 தகவலறிந்த வட்டாட்சியர் கே.கே. கோவிந்தன் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்டு விசாரித்தார்.

News

Read Previous

காவடிச் சிந்து

Read Next

வஃபாத்து செய்தி

Leave a Reply

Your email address will not be published.