காவடிச் சிந்து
காவடிச் சிந்து
பூமணம் வீசிடும் பூமனம் – கண்டு
பொருட்சுவை தேடுதே பாவினம்-எந்தப்
பொழுதாகிய நிலையாகினும் உனையேநினைந் துருவாகிடப்
பொழிவேன் -உளம் -நுழைவேன்!
இன்பமே காண்கிறேன் உன்னிடம்- அதை
ஏற்பதாய்க் கூறுவாய் என்னிடம் – நீ
இனியாகினும் உணர்வாயெனக் கனிவாயுனைக் கவிபாடிட
இழுப்பேன் -தினம்- உழைப்பேன்!
–
அதிரை கவியன்பன் கலாம். அபுதாபி
Tags: காவடிச் சிந்து