திருட்டு மணல் அள்ளிய ஜே.சி.பி., டிராக்டர் பறிமுதல்: இருவர் கைது
முதுகுளத்தூர் அருகே மேலச்சாக்குளம் கிராமத்தில் திங்கள்கிழமை அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்த ஜே.சி.பி. இயந்திரம் மற்றும் டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள மேலச்சாக்குளம் கண்மாய்க்குள் மலட்டாறைச் சேர்ந்த ஜே.சி.பி. ஓட்டுநர் குமார், டிராக்டர் ஓட்டுநர் சுப்பிரமணியன் ஆகிய இருவரும் அனுமதியின்றி மணல் அள்ளிக்கொண்டிருந்தனர்.
இது குறித்து போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று இருவரையும் கைது செய்தனர். மணல் அள்ளிய வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.