கோவையில் ஈகைத்திருநாள் சிறப்புத் தொழுகை
இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாகட்டுமாக.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பாக கடந்த ஆண்டுகளைப்போலவே இவ்வாண்டும் ஈகைத்திருநாள் சிறப்புத் தொழுகை சரியாக காலை 8:00 மணிக்கு கரும்புக்கடை இஸ்லாமியா மெட்ரிக்குலேஷன் பள்ளி திடலில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
தொழுகையின் முடிவில் சிறப்பு சொற்பொழிவும் பிரார்த்தனையும் நடைபெறும்.
பெருநாள் அன்று மழை வருமானால், தொழுகை 7:45 மணிக்கு மஸ்ஜிதுல் இஹ்ஷானிலும், 8:00 மணிக்கு மஸ்ஜிதுல் ஹுதாவிலும் தனித்தனியாக நடைபெறும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.