புனித ரமலான் வாழ்த்துக்கள்
புனித ரமலான் வாழ்த்துக்கள்
இஸ்லாம் என்னும் ஒருமதமாம்
இறைவன் வகுத்த திருமதமாம்
அறம் போதிக்கும் அருமதமாம் .
அனைவரும் போற்றும் பெருமதமாம்
குர்- ஆன் வழியில் நடப்பவர்க்கு
குறைகள் ஏதும் வாராது.
தொழுகை முறையாய் செய்பவர்க்கு
தொல்லைகள் ஏதும் வாராது.
புனித ரமலான் மாதத்தில்
இனிதே நோன்பு இருப்பவர்க்கு
புனிதம் வாழ்வில் சேர்ந்திடுமே
மனித நேயம் மலர்ந்திடுமே .
காலை முதலாய் பகல்முழுதும்
உண்ணார், நீரும் அருந்தாரே
மாலை நோன்பு முடிக்கையிலே
மசூதி சென்று தொழுவாரே
அல்லாவைத் தொழுது கஞ்சிதனை
எல்லாரோடும் பகிர்ந்திடுவார்
இல்லாதவர்க்கு ஈகைசெய்து
நல்லறம் தன்னைப் பேணிடுவார்.
இந்து , கிறித்தவர் அனைவருமே
இப்தார் நோன்பில் கலந்திடுவார் .
இப்பார் முழுதும் இணக்கமுடன்
இருப்பதை உலகிற்குணர்த்திடுவார் .
இஸ்லாம் என்றும் வாழ்க
இப்தார் நோன்பு வாழ்க .
மத நல்லிணக்கம் வாழ்க
மனித நேயம் வாழ்க
மனித குலத்தோரெல்லாம்
மகிழ்வுடன் வாழ்க , வாழ்க .
சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்
Tags: ரமலான் வாழ்த்துக்கள்