தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
—————–
நன்மோகம் கொண்ட
நாரத மாமுனிவர்
திருமணம் செய்ய
கிருஷ்ண பரமாத்மாவிடம்
ஏற்ற துணையை
எனக்குத் தரவேண்டும்
என வேண்டினார்
லோக பிராந்தியத்தில்
என்னை மனதில் கொள்ளா
எப்பெண்ணையும்
நீ மணக்கலாம்
எனக்கிருஷ்ணர்
நாரதருக்கு வரம்தர…
நாடும் முழுதும் தேடிய
நாரத மாமுனிவர்
கண்ணனை நினையா
கன்னிகள் இல்லை
என்பதை தெரிந்தார்
பின்பு தெளிந்தார்
நாரதரே
நல்ல பெண்ணாய் மாறி
கிருஷ்ணனை மணந்து
அறுபது பிள்ளைகளை
ஆசையாக பெற்றெடுத்தார்
அதுவே தமிழ் ஆண்டுகளென
நான் சொல்லவில்லை
புராணம் சொல்கிறது…
அந்த அறுபதில்
38 வது பிள்ளைதான்
இன்று இனிதாக பிறக்கும்
குரோதி ஆண்டு
தமிழில் இதன் பெயர்
பகைக்கேடு
குரோதி ஆண்டே வருக…
அனைவர் வாழ்விலும்
நல்விடியலைத் தருக…
அனைவருக்கும் இனிய
தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
பா.திருநாகலிங்க பாண்டியன்