வாழ்க ஜமால்!
வாழ்க ஜமால்!
அழகுக்கு மறுபெயராய்
அறிவுக்கு ஆருயிராய்
எழுபது ஆண்டுகளாய்
எழுத்துக்கு தூண்டுகோலாய்
எழுந்து நிற்கிறது
எங்கள் ஜமால்!
ஞானத்தை தினம்புகுத்தி
வானத்தை வசப்படுத்தி
மானத்தைக் காத்தவளே!
உன் புனித மண்ணில்தான்
மனிதம் கற்றேன்!
மாணிக்கம் பெற்றேன்!
உன் கருவறையில்தான்
சிறகு முளைத்தது!
வாழ்வு பிழைத்தது!
துயரத்தை மறக்க வைத்தாய்!
உயரத்தில் பறக்க வைத்தாய்!
நீ சொல்லிக் கொடுத்தது
இன்று அள்ளிக் கொடுக்கிறது!
ஜமாலியன் என்பது
என் வாழ்வின் உரம்
நான் பெற்ற வரம்
வாழ்க ஜமால்
வாழ்க வாழ்கவே!
எழுதியவர்:
முனைவர் மு. அ. காதர்
கணக்காய்வாளர்
தலைவர், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)