திருக்குறளில் வாழ்வியல் சிந்தனைகள் – தேசியப் பயிலரங்கம் -2021
திருக்குறளில் வாழ்வியல் சிந்தனைகள் –
தேசியப் பயிலரங்கம் -2021
ஆய்வுக்கட்டுரை வழங்க கடைசி நாள்: 30.07.2021.
பேரன்புடையீர்,
அனைவருக்கும் இனிய அன்பான வணக்கம்.
Ø மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியற்புலத் தமிழியல்துறை ஒருங்கிணைப்பின்கீழ் திருக்குறளில் வாழ்வியல் சிந்தனைகள் என்னும் பொருளில் தேசியப் பயிலரங்கம் இணையவழி நடைபெற உள்ளது. திருக்குறளில் ஈடுபாடுகொண்டுள்ள அறிஞர்பெருமக்கள், பேராசிரியர்கள்,ஆய்வாளர்கள்,கல் வியாளர்கள் ஆகியோர்கள் ஆய்வுக் கட்டுரை வழங்கலாம்.
Ø ஆய்வுக் கட்டுரை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் அமையலாம். ஆய்வு விதிமுறைகளுக்கு உடபட்டு, ஆய்வுக்கட்டுரை வழங்க வேண்டுகிறேன்.
Ø கட்டுரை ஏ4 தாளில் 5 பக்கங்களுக்கு மிகாமல், தட்டச்சுச் செய்து, மின்னஞ்சல் : mkukural2021@gmail.com முகவரிக்கு 30.07.2021 ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டுகிறேன். காலம் தாழ்த்தப்பட்டு வரும் கட்டுகைள் ஏற்றுக்கொள்ள இயலாது.
Ø ஆய்வுக் கட்டுரை வழங்குபவர்கள் கட்டணம் செலுத்தவேண்டியது இல்லை. ஆனால், ஆய்வுக்கோவை பெறுவதற்கு மட்டும் தங்களின் சொந்தச் செலவில் பெற்றுக்கொள்ள வேண்டுகிறோம்.
ஆய்வுக் கட்டுரை அனுப்ப விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட புலனக்குழுவில் இணைய வேண்டுகிறேன்.
முனைவர் போ.சத்தியமூர்த்தி
தலைவர், தமிழியல்துறை,
தமிழியற்புலம்,
மதுரை காமராசர் பல்கலை;கழகம்
மதுரை – 625021
9488616100
மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழியல் துறை நடத்தும்
திருக்குறள் தேசியக் கருத்தரங்கு – புலனக்குழு
“ஆய்வுக் கட்டுரை வழங்குபவர்கள் மட்டும்”
அன்புகூர்ந்து இணைய வேண்டுகிறேன்.
முனைவர் போ.சத்தியமூர்த்தி